அடுத்த 24 மணி நேரத்திற்கு காவிரி டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும் – வானிலை மையம் தகவல்

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக வலுப்பெற வாய்ப்பில்லை என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும், அடுத்த 24 மணி நேரத்தில் காஞ்சிபுரம், திருவண்ணாமலை, காவிரி டெல்டா உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அறிவித்துள்ளது.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், தென்மேற்கு வங்கக் கடல் பகுதிக்கு அடுத்த 2 நாட்களுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *