ரஷ்யாவில் எபிபானி நாளை முன்னிட்டு கிறிஸ்தவர்கள் குளிர்நிறைந்த பனி நீரில் தங்கள் வணக்கத்தைத் தெரிவித்துக் கொண்டனர். ஏசுநாதர் ஞானஸ்நானம் பெற்றதைக் குறிக்கும் வகையில் ரஷ்யாவில் எபிபானி நாள் கொண்டாடப்படுகிறது. அந்த நாளை நினைவூட்டும் வகையில் மைனஸ் 2 டிகிரி பாரன்ஹீட் குளிர் நிறைந்த ஏரி மற்றும் ஆறுகளில் இறங்கி தங்களைப் புனிதப்படுத்திக் கொண்டனர்.
இதுபோல குளிப்பதால் தங்களின் பாவங்கள் கழுவப்படுவதாக கிறிஸ்தவர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.