ஆஸ்திரேலியாவில் பெய்த ஆலங்கட்டி மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

ஆஸ்திரேலியாவில் பெய்த ஆலங்கட்டி மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

சிட்னி, ஹன்ட்டர் வேலி, வாலங்காங்  உள்ளிட்ட பகுதிகளில் பனிப்புயல் வீசியது. இதன் தொடர்ச்சியாக ஆலங்கட்டி மழை பெய்தது. அப்போது டென்னிஸ் பந்தின் அளவுக்கு பனிக்கட்டிகள் விழுந்தன. இதனால் ஏராளமான கார்கள் உள்ளிட்ட வாகனங்கள், வீடுகளின் கூரைகள், டிராஃபிக் சிக்னல்கள் சேதமுற்றன.

இதன் காரணமாக, மக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *