ஆப்பிரிக்க நாடான கென்யாவில் யானைகள் பெரும் அழிவைச் சந்தித்து வருவதால் யானை தந்தங்கள் விற்பனையை சீனா தடை செய்துள்ளது. உலகில் அழிந்து வரும் உயிரினங்களான காண்டாமிருகம், புலி, யானை ஆகியவற்றின் உறுப்புகள் சீனாவில் அதிகம் விற்பனையாகின்றன. இந்நிலையில், கென்யாவில் நடைபெற்ற சீன, ஆப்பிரிக்க கூட்டமைப்புக் கூட்டத்தில் யானைகளைக் காப்பாற்றும் பொருட்டு அவற்றின் தந்தங்களை விற்பனை செய்யத் தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து யானைத் தந்தங்கள் விற்பனைக்கு சீனா தடை விதித்துள்ளது.