அமெரிக்க நாடாளுமன்றக் குழு சந்திப்பில் கூகுள் சி.இ.ஓ., சுந்தர் பிச்சையைப் புகழ்ந்த சென்னை பெண்

அமெரிக்க நாடாளுமன்ற குழுவில் விசாரணை நடந்து கொண்டிருந்த போது சென்னையில் பிறந்த பெண் உறுப்பினர் ஒருவர், கூகுள் சி.இ.ஓ. சுந்தர் பிச்சையைப் புகழ்ந்தார்.

தரவுகள் பாதுகாப்பு தொடர்பாக சுந்தர் பிச்சையிடம் நாடாளுமன்றக் குழு உறுப்பினர்கள் விசாரணை நடத்தினர். அப்போது பிரமிளா ஜெயபால்  என்ற பெண் உறுப்பினர், இந்தியாவில் தாங்கள் பிறந்த அதே ஊரில் தான் தாமும் பிறந்ததாகக் குறிப்பிட்டார்.

தற்போது தாங்கள் ஒரு நிறுவனத்திற்கு தலைமை தாங்குவதைப் பார்க்கையில் உற்சாகம் ஏற்படுவதாகக் குறிப்பிட்டார். அமெரிக்காவில் குடியேறி இந்த நாட்டின் மதிப்பை உயர்த்துவதில் பங்கெடுத்து கொண்டதாகவும் சுந்தர் பிச்சையை பாராட்டிய அவர், நன்றியும் கூறினார். சுந்தர் பிச்சையைப் போலவே அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினரான பிரமிளா ஜெயபாலும் சென்னையில் பிறந்தவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *