இமாச்சலப் பிரதேசத்துக்குச் சுற்றுலா சென்றுள்ள ராகுல்காந்தி அங்குள்ள சிறப்புப் பள்ளியில் மாணவர்களுடன் சேர்ந்து சதுரங்கம் விளையாடி அவர்களை மகிழ்வித்துள்ளார்.
5மாநிலச் சட்டமன்றத் தேர்தல் முடிந்து 3மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி ஆட்சியமைத்துள்ளது. இதனை தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஓய்வெடுப்பதற்காக இமாச்சலப் பிரதேசப் பிரதேசத்துக்குச் சென்றுள்ளார். அவருடன் தங்கை பிரியங்காவும் அவரின் குழந்தைகளும் சென்றுள்ளனர்.
மசோபா என்னுமிடத்தில் உள்ள சிறப்புப் பள்ளிக்கு ராகுல்காந்தி திடீரெனச் சென்று மாணவர்களை வியப்பில் ஆழ்த்தினார். மாணவர்களுடன் கலகலப்பாகப் பேசிச் சிரித்ததுடன், அவர்களுடன் ஒன்றாக அமர்ந்து சதுரங்கம் விளையாடியும் மகிழ்ந்தார். ராகுல்காந்தி வந்திருப்பதை அறிந்த அப்பகுதி மக்களும் பள்ளிக்கு வந்து அவரைச் சந்தித்தனர்.