2 நாள் பயணமாக ஜப்பான் புறப்பட்டுச் சென்றார் பிரதமர் நரேந்திர மோடி

2 நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி ஜப்பான் புறப்பட்டுச் சென்றார்.

ஜப்பானில் 2 நாட்கள் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடிக்கு, டோக்கியோவில் இருந்து சுமார் 110 கிலோமீட்டர் தூரத்தில் புஜி  மலை உச்சியில் உள்ள தமது விடுமுறைக்கால பண்ணை இல்லத்தில் அந்நாட்டு பிரதமர் ஷின்சோ அபே விருந்தளிக்க திட்டமிட்டுள்ளார்.

மேலும், இந்தியா – ஜப்பான் இடையிலான ஆண்டுக் கூட்டத்தின்போது, இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்தும், இந்தோ-பசிபிக் கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கத்தைக் கண்காணிப்பது குறித்தும் இரு தலைவர்களும் விவாதிக்க உள்ளனர். மேலும் பொருளாதார வளர்ச்சி தொடர்பான முக்கிய ஒப்பந்தங்களும் பிரதமரின் ஜப்பான் பயணத்தின் போது கையெழுத்தாக இருப்பதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *