ரஃபேல் ஒப்பந்தத்திற்கான செயல்முறைகளை சந்தேகிப்பதற்கு எந்த காரணமும் இல்லை. ஒப்பந்தத்திற்கு பின்பற்றப்பட்ட வழிமுறைகளிலும் சந்தேகத்திற்கு இடமான அம்சங்கள் இல்லை, வெறும் அனுமானத்தின் அடிப்படையில் கூறப்படும் புகார்களால் எந்த பலனும் இல்லை.
ரஃபேல் விமானங்களுக்கான விலையை தீவிரமாக பரிசீலித்தோம், 5ம் தலைமுறைக்கான போர்விமானங்கள் இந்திய விமானப்படைக்கு அவசியம். விமானங்களின் விலைகளை ஒப்பிட்டுப் பார்ப்பது நீதிமன்றத்தின் வேலையில்லை.
126 விமானங்கள் வாங்க வேண்டும் என்று மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது. ரஃபேல் விமானங்களின் தரத்திலும் உச்சநீதிமன்றத்திற்கு எந்த சந்தேகமும் இல்லை
வர்த்தக ரீதியாக சிலருக்கு சலுகைகள் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவதற்கும் ஆதாரம் இல்லை. வழிமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டுள்ளதால் ரஃபேல் ஒப்பந்தம் குறித்து விசாரணை தேவையில்லை என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்