படை வீரர் கொடி நாள் நிதி வசூலை தமிழக ஆளுநர் தொடங்கிவைத்தார்

படை வீரர் கொடி நாள் நிதி வசூலை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தொடங்கிவைத்தார்.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், 25 ஆயிரம் ரூபாய் வழங்கி கொடிநாள் நிதிவசூலைத் தொடங்கி வைத்த ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தமிழகத்தில் உள்ள அனைத்து படை வீரர்களுக்கும், முன்னாள் படை வீரர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் கொடி நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

நாட்டின் இறையாண்மையைக் காப்பதில், படைவீரர், முன்னாள் படை வீரர்களின் உன்னதமான தியாகங்களை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நினைவு கூர்ந்தார். அனைவரும் கொடிநாள் நிதிக்கு நிதியை வாரி வழங்கி, முன்னாள் படை வீரர்கள், அவர்தம் குடும்பத்தினருக்கு வகுக்கப்பட்ட திட்டங்களை மேலும் சிறப்பாக செயல்படுத்திட அரசுக்கு உதவுமாறு வேண்டு கோள் விடுத்தார்.

இதேபோல் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் கொடி நாள் நிதியாக 19 ஆயிரம் ரூபாயை வழங்கினார். கொடிநாள் நிதி வசூலுக்கான உண்டியலில் பணத்தை செலுத்திய முதலமைச்சர், தமது சட்டையில் அதற்கான கொடியையும் ஒட்டிக் கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *