காரைக்கால் மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணத் தொகை, அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கஜா புயலால் காரைக்கால் மாவட்டத்தில் அதிக சேதம் ஏற்பட்டிருப்பதாக தெரிவித்தார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்கு இடைக்கால நிவாரணமாக 10 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், மத்திய அரசிடம் கோரப்பட்ட 187 கோடி ரூபாய் நிவாரணத் தொகை கிடைக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் நாராயணசாமி கூறினார்.