டெல்லியில், காற்று மாசு அதிகரித்து அபாயகரமான நிலையை எட்டியிருக்கிறது. பொதுவாக, காற்று மாசு உருவானால், அந்த காற்று மாசு அகன்றுபோவதற்கு, வெப்பத்துடன் கூடிய சீதோஷ்ண நிலை தேவைப்படும்… ஆனால், தற்போது, குளிர்காலம் என்பதால், காற்றில் கலந்திருக்கும் மாசும், புதிதாக சேரும் காற்று மாசுவும், கலைந்துபோகாமல், அப்படியே தேக்கமாகி வருகிறது.. இதனால், டெல்லியில், காற்று மாசின் அளவு, மிகவும் மோசமான நிலைக்கு சென்றுவிட்டிருக்கிறது.டெல்லியின் காற்று மாசு குறியீடு 343ஆக இருப்பதாக, மத்திய மாசுகட்டுப்பாட்டு வாரியம் அறிவித்திருக்கிறது.
2018-12-09