நர்மதா அணை அருகே நிறுவப்படும் சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு இறுதி வடிவம் கொடுக்கும் பணி தீவிரம்

குஜராத் மாநிலம் நர்மதா அணை அருகே நிறுவப்படும் சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு இறுதி வடிவம் கொடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

182 மீட்டர் உயரம் கொண்ட படேல் சிலையை பிரதமர் நரேந்திரமோடி வரும் 31 ஆம் தேதி திறந்து  வைக்க இருக்கிறார். ஏறத்தாழ 3400 தொழிலாளர்கள், 250 பொறியாளர்கள் இரவு, பகல் பாராமல் இதற்காக பணியாற்றி வருகின்றனர்.  2,389 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும் இந்த சிலைதான் உலகிலேயே உயரமான சிலையாகும்.

கடல் மட்டத்தில் இருந்து 193 மீட்டர் உயரத்தில் ஒரே நேரத்தில் 200 பேர் நிற்கும் விதத்தில் பார்வையாளர் மாடமும் சிலையில் அமைக்கப்பட்டுள்ளது. சர்தார் படேல் அருங்காட்சியகம், உள் அலங்காரம், நினைவு தோட்டம் உள்ளிட்டவற்றுக்கு இறுதி வடிவம் கொடுக்கும் பணி துரிதகதியில் நடைபெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *