இந்தியப் பங்குச்சந்தைகள் இன்றைய வணிக நேர முடிவில் கடும் வீழ்ச்சியடைந்துள்ளன.
மும்பை பங்குச்சந்தைப் பங்குவிலைக் குறியீடு சென்செக்ஸ் 690 புள்ளிகள் சரிந்து 35ஆயிரத்து 742ஆக இருந்தது. தேசியப் பங்குச்சந்தைப் பங்குவிலைக் குறியீடு நிப்டி 198புள்ளிகள் சரிந்து பத்தாயிரத்து 754ஆக இருந்தது. வார இறுதி என்பதாலும், வரும் ஆண்டில் உலகப் பொருளாதார வளர்ச்சி குறையும் என்கிற அச்சத்தாலும் பெரும்பாலோர் பங்குகளை விற்றதே வீழ்ச்சிக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.
ரிலையன்ஸ், இன்போசிஸ், டிசிஎஸ், ஐசிஐசிஐ வங்கி, எச்டிஎப்சி, ஐடிசி, மாருதி, எல் அண்டு டி, இந்துஸ்தான் யூனிலீவர், ஆக்சிஸ் வங்கி, விப்ரோ, இண்டஸ்இண்ட் வங்கி ஆகியவற்றின் பங்குகள் 4விழுக்காடு சரிந்தன. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 46காசுகள் சரிந்து எழுபது ரூபாய் 16காசுகளாக இருந்தது.