9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இணைய வசதி ஏற்படுத்தப்பட்டு, அனைத்து வகுப்புகளும் கணினிமயமாக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் வெள்ளாளபாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அட்டல் டிங்கரிங் லேப் எனப்படும் நவீன அறிவியல் ஆய்வகம் அமைக்கப்பதற்காக மத்திய அரசிடம் கூடுதல் நிதி பெற முயற்சித்து வருவதாக தெரிவித்தார்