150 ஆண்டுகளுக்கு பிறகு இன்று முழு சந்திர கிரகணத்தின் போது நீல நிலவு, ரத்த நிலவு, சூப்பர் நிலவு, ஆகிய மூன்று அதிசயங்கள் நிகழவுள்ளது.

சூரியனுக்கும், நிலவுக்கும் நடுவில் பூமி வரும்போது, பூமியின் நிழல் நிலவின் மீது பட்டு சந்திர கிரகணம் நிகழ்கிறது. இந்த மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது, முழு சந்திர கிரகணம் நிகழ்கிறது. இந்த முழு சந்திர கிரகணம் இன்று ஏற்படுகிறது. மேலும் இந்நிகழ்வோடு சேர்ந்து, ப்ளூ மூன், சூப்பர் மூன், ப்ள்ட் மூன் எனப்படும் 3 அதிசய நிகழ்வுகள் இன்று ஏற்படும் என வானியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இந்த முழு சந்திர கிரகணம், இந்தியா முழுவதும் தெரியும் என்றும், வெறும் கண்களாலேயே இதனை பார்க்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொலைநோக்கி மூலம் இதனை காணவும் கொடைக்கானல் வானிலை ஆராய்ச்சி நிலையத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தியாவைப் பொறுத்தவரை, சந்திர கிரகணம் இன்று மாலை 5.18 மணிக்குத் தொடங்கி 7.37 மணி வரை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *