உயிர் கொல்லி ஸ்டர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி மக்களால் நடத்த பட்ட போராட்டத்தில் காவல்துறை துப்பாக்கி சூடு ! 13பேர் பலி ஜனநாயக போராட்டத்தில் எடப்பாடி அரசு நடத்திய அராஜகம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம் !!
மன்னையும் மனிதர்களையும் கொன்று வரும் ஸ்டர்லைட் நாசகர ஆலைய இழுத்து மூட கோரி 100 நாட்களாக தூத்துகுடி பொது மக்கள் போராடி வருகின்றனர் அந்த போராட்டத்தின் மறு வடிவமாக நடைபெற்று வந்த கடையடைப்பு மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்டத்தில் காவல் துறையினரை ஏவிய தமிழக அரசு மிக கொடுரமாக தன் மக்கள் மீதே துப்பாக்கி சூடு நடத்தி உள்ளது இதுவரை 10 பேர் கொடுரமாக பலி ஆகி உள்ளனர் பலர் படுகாயம் அடைந்து உள்ளனர் இந்த அடாவடி அராஜக போக்கை இந்திய தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாக கண்டிக்கிறது
உடனடியாக உயிர் இழந்தவர்களுக்கு 2 கோடி ரூபாயும் படுகாயம் அடைந்தவர்களுக்கு 50 லட்சம் ரூபாயும் காயம் அடைந்தவர்களுக்கு உயர் தர சிகிச்சையும் அளிக்க பட வேண்டும் ஸ்டர் லைட் ஆலையை இன்றே தமிழக அரசு இழுத்துச் மூட வேண்டும்
மக்களுக்காக தான் அரசு பெரும் முதலாளிகளுக்காக அல்ல என்பதை முதலமைச்சர் உணர வேண்டும்
துப்பாக்கி சூடு நடத்திய காவல்துறை அதிகாரிகள் காவல்துறை உயர் அதிகாரிகள் வரை அனைவரையும் உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கேட்டு கொள்கிறது