தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் – கி.வீரலட்சுமி கண்டனம்

இரும்பில் ஆன இயந்திர துப்பாகிகளுக்கு இதயமும் இறக்கமும் இருக்காது.ஆனால் அதை கையில் ஏந்தி எங்களை சுடுக்கின்ற கரங்களுக்கு இறக்கமும் இதயமும் இல்லையா?

மீன் பிடிக்கச்சென்றால் பக்கத்து நாட்டு காரன் சுடுக்கின்றான்.

வேலைத்தேடி சென்றால் பக்கத்து மாநிலத்து காரன் சுடுக்கின்றான்.

வாழுகின்ற நாட்டில் வளமோடு வாழலாம் என்று வாழ முயற்ச்சித்தால் ஸ்டெர்லைட் ஆலை என்ற ஒரு தொழிற்சாலைக்காக நாட்டில் வாழும் மக்களை நாடாளும் அரசே சுட்டுப்படுகொலை செய்வது எந்த விதத்தில் நியாயம்.

நடப்பது மக்களாட்சியா?
என்ற கேள்வி தமிழ் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

சர்வாதிகாரத்திற்கு எதிராக என்றும் வதைக்கப்படுகின்ற ஒவ்வொரு மனித உயிரும் வதைக்கப்படுவதில்லை விதைக்கப்படுகின்றது.

இறந்த ஒவ்வொரு எம் உறவுகளின் உயிருக்கும் ஒரு கோடி ரூபாய் நிவாரணமும் அரசு வேலையும் தமிழக அரசு வழங்க வேண்டும்.
போராட்டத்தில் காயமடைந்த அனைத்து உறவுகளும் நலம் பெற இறைவனை வேண்டிக்கொள்கின்றோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *