ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி சிந்து , அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை பிவி சிந்து, ஜப்பானின் அகேன் யமகுச்சியை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் 21க்கு 12, 21 க்கு 19 என்ற நேர்செட் கணக்கில் அகேன் யமகுச்சியை வீழ்த்தி, பி.வி சிந்து அரையிறுதிக்கு முன்னேறினார். இதனை தொடர்ந்து இன்று நடைபெறும் அரையிறுதி போட்டியில் தாய்லாந்தின் ரட்சனோக் இன்டனோனுடனை , பி.வி. சிந்து எதிர்கொள்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *