ஸ்மார்ட் நகரங்கள் திட்டத்தின் கீழ் ஈரோடு உள்ளிட்ட மேலும் 9 புதிய நகரங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ஸ்மார்ட் நகரங்களின் எண்ணிக்கை 99 ஆக உயர்ந்துள்ளது.
மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஹர்தீப் புரி ஸ்மார்ட் நகரங்கள் திட்டத்தின் கீழ் மேலும் 9 புதிய நகரங்கள் இடம்பெறுவதாக அறிவித்தார். 4வது சுற்றில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த பட்டியலில் தமிழ்நாட்டில் இருந்து ஈரோடு இடம்பெற்றுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் இருந்து ஷஹரான்பூர், மொராதாபாத், பேரெய்லி ஆகிய நகரங்கள் இடம்பெற்றுள்ளன. அருணாச்சலப்பிரதேசத்தில் இருந்து இத்தாநகரும் லட்சத்தீவுகளில் இருந்து கவரட்டியும் பீகாரிலிருந்து பீகார்ஷரீஃபும், டையூ மற்றும் டாமனிலிருந்து டையூவும் இடம்பெற்றுள்ளன. இதேபோல, யூனியன் பிரதேசமான தாத்ரா-நாகர்ஹவேலியில் இருந்து அதன் தலைநகரான சில்வஸ்ஸாவும் இடம்பெற்றுள்ளது.