ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் தொடங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது- வேதாந்தா

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வேதாந்தா நிறுவனம் தனது ஆண்டு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் தாமிர உருக்காலைக்கு எதிராக நடைபெற்ற தூத்துக்குடியில் சுமார் 22000 பேர் கலந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின்போது வன்முறை ஏற்பட்டதால் அதில்  13 பேர் உயிரிழந்தனர். இதனை அடுத்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டது.

இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை நடத்தி வரும் வேதாந்தா நிறுவனம் வெளியிட்டுள்ள ஆண்டறிக்கையில், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் தொடங்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளது.

மேலும், தூத்துக்குடியில் இரண்டாவது ஆலை அமைக்கும் பணிகளுக்கு நீதிமன்றம் தடைவிதித்துள்ள நிலையில், பொதுமக்களின் கருத்துக் கேட்புக்கு பிறகு அந்தத்திட்டமும் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *