நீலகிரி மாவட்டத்தில் துரியன் பழ சீசன் தொடக்கம்

நீலகிரி மாவட்டம் குன்னூரில் துரியன் பழ சீசன் தொடங்கியதை அடுத்து, சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.

குன்னூர்- மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் பர்லியார் பகுதியில் அரசு தோட்டக்கலைப் பண்ணையில், மலேசியாவை தாயகமாக கொண்ட துரியன் பழ மரங்கள் உள்ளன.

இதே போல் அருகேயுள்ள தனியார் தோட்டங்களிலும் இந்த துரியன் பழம் காய்க்கும் மரங்கள் அதிகளவில் உள்ளன. தற்போது, துரியன் பழ சீசன் தொடங்கியுள்ள நிலையில் பழங்களின் உற்பத்தி குறைவாக உள்ளதால் கிலோ ஒன்றுக்கு  700 ரூபாய் வரை அவை விற்பனையாகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *