வைகோவை தரக்குறைவாக பேசியதாக வழக்கறிஞர்கள் 2 பேர் மீது மதிமுக-வினர் தாக்குதல்

தூத்துக்குடி நீதிமன்ற வளாகத்திற்குள் வைகோவுக்கு எதிராக கோசமிட்ட வழக்கறிஞர் ஒருவரை மதிமுகவினர் சரமாரியாக தாக்கினர்.

தூத்துக்குடி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்பாக ஆஜராக வந்திருந்த மதிமுக பொதுசெயலாளர் வைகோ சென்றிருந்தார். அப்போது முத்தையாபுரத்தை சேர்ந்த வழக்கறிஞர்கள் ஜெகதீஷ் மற்றும் வெற்றிவேல் ஆகியோர், வைகோவுக்கு எதிராக கோஷமிட்டதாக கூறப்படுகின்றது.

நீதிமன்றத்துக்குள் செல்லும் போது மதிமுகவினர் அதனை கண்டு கொள்ளாமல் சென்றனர். அவர்கள் திரும்பும் போதும் வைகோவுக்கு எதிராக கோஷமிட்டதால் ஆத்திரம் அடைந்த மதிமுகவினர் வைகோவை வழியனுப்பி வைத்து விட்டு அவர்கள் இருவரையும் அடித்து உதைத்து புரட்டி எடுத்தனர். ஒருவர் தப்பிவிட ஒருவருக்கு தர்ம அடி விழுந்தது.

இதற்கிடையே மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த வைகோ, தனக்கு எதிராக கோசமிட்டவர்கள் நாம் தமிழர் கட்சியினர் என்று குற்றஞ்சாட்டி உள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *