சென்னை நுங்கம்பாக்கத்தில் குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்ததாக இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவரது பி.எம்.டபிள்யூ., கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பிரபல இயக்குனர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் கே பாரதிராஜா நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் தனது பி.எம்.டபிள்யூ காரில் சென்று கொண்டிருந்தார். அவரு காரை சோதனையிடுவதற்கான நிறுத்த போலீசார் முயற்சித்ததாக கூறப்படுகிறது. ஆனால் காரை நிறுத்தாமல் மனோஜ் வேகமாக சென்றதாக சொல்லப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து அடுத்து, அடுத்த சிக்னலில் காரை மறிக்கும்படி போக்குவரத்து போலீசார், தகவல் தெரிவித்துள்ளனர். அந்த பகுதியில் இருந்த போக்குவரத்து போலீசார், மனோஜின் காரை மறித்து நிறுத்தியுள்ளார்.
மேலும், போலீசார் நிறுத்த சொல்லியும் காரை நிறுத்தாமல் சென்றது குறித்து மனோஜிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அவர் குடிபோதையில் இருப்பது போலீசாருக்கு தெரிந்தது.
தனை அடுத்து சுவாச சோதனை உபகரணம் மூலமாக நடத்தப்பட்ட ஆய்வில் மனோஜ் குடி போதையில் இருப்பது உறுதியானது.