வழக்கறிஞர்களின் பள்ளி, கல்லூரி சான்றிதழ்களை ஆய்வு செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வழக்கறிஞர்கள் கட்டபஞ்சாயத்து செய்வது தொடர்பான புகார் குறித்த வழக்கை, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் நேற்று விசாரித்தார். இதையடுத்து, அனைத்து வழக்கறிஞர்களின் பள்ளி, கல்லூரி சான்றிதழ்களையும் ஆய்வு செய்ய வேண்டும் என நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டுள்ளார். அடிப்படை வசதி இல்லாமல் இயங்கும் லெட்டர் பேடு சட்ட கல்லூரிகள் மீது இந்திய பார் கவுன்சில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆணையிட்ட நீதிபதி, பன்னிரெண்டாம் வகுப்பு கூட படிக்காமல், திறந்த நிலை பல்கலைக்கழகங்களில் படித்தவர்கள், லெட்டர் பேடு கல்லூரிகளில் பணம் கொடுத்து சட்ட பட்டத்தை விலைக்கு வாங்குகின்றனர் என குற்றம்சாட்டினார். போலி வழக்கறிஞர்களை நீக்கி புதிய வாக்காளர் பட்டியல் தயாரித்த பிறகே பார்கவுன்சில் தேர்தல் நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை வரும் 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *