வரும் 6ம் தேதி தென் கிழக்கு அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாக உள்ளதால் ஆழ் கடல் பகுதிகளில் மீன் பிடிக்கும் மீனவர்கள் 5ம் தேதிக்குள் கரைக்கு திரும்பும்படி சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்திள்ளது.
தென் மேற்கு வங்ககடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனத்தின் காரணமாக உள் தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் மழை பெய்யவும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வரும் 6ம் தேதி தென் கிழக்கு அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாக உள்ளதால் ஆழ் கடல் பகுதிகளில் மீன் பிடிக்கும் மீனவர்கள் 5ம் தேதிக்குள் கரைக்கு திரும்பும்படி அறிவுறுத்தியுள்ளது. சென்னையை பொருத்த வரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், மாலை அல்லது இரவு நேரங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது