அலைச்சறுக்குப் போட்டியில் புதிய உலக சாதனை படைத்த பெண்-மாயா கேபிரியா
போர்ச்சுகல் நாட்டின் நசாரே கடல்பகுதியில் நடைபெற்ற அலை சறுக்குப் போட்டியில் உலக சாதனையை பிரேசிலைச் சேர்ந்த 31 வயதான பெண் மாயா கேபிரியா முறியடித்து புதிய கின்னஸ் சாதனை படைத்தார்.
68 அடி உயரமான அலைக்கு நடுவே அவர் பாய்ந்தோடி வந்த காட்சி பார்ப்பவர்களை பரவசத்தில் ஆழ்த்தியது. கடந்த 18ம் தேதி நடத்தப்பட்ட இந்த சாதனையை அங்கீகரிப்பதாக கின்னஸ் நிறுவனம் மாயா கேபிரியாவுக்கு தெரிவித்துள்ளது.