தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் முதல் டிசம்பர் வரை பெய்யும். ஆனால் பருவநிலை மாற்றம் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக பருவமழை முறையாக பெய்வதில்லை. இதனால் வறட்சி ஏற்பட்டு விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்கு தண்ணீர் பற்றாக்குறை நிலவுகிறது. குறிப்பாக, கடந்தாண்டு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை பொய்த்ததால் தமிழகத்தில் கடும் வறட்சி நிலவியது. . அக்டோபர் இறுதியில் சற்று ஓய்ந்த மழை, நவம்பரில் மீண்டும் வலுப்பெற்றது. இலங்கை அருகே வங்க கடலில் ஏற்பட்ட காற்றழுத்தத்தால் தென்மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்தது.
இதற்கிடையில், நவம்பர் 30ல் உருவான ஓகி புயல் கன்னியாகுமரி, நாகர்கோவில் ஆகிய மாவட்டங்களை புரட்டிப்போட்டது. ஓகி புயலுக்குப் பின்னர் தமிழகத்தில் மழை பெய்வது குறைந்துவிட்டது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் ஒரு சில இடங்களில் மட்டும் லேசான மழை பெய்தது. வடகிழக்கு பருவமழை இயல்பைவிட 9 சதவீதம் குறைந்து 399 மி.மீ ஆக பதிவாகியுள்ளது. இதனால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த ஆண்டு இயல்பைவிட 62 சதவீதம் குறைவாக மழை பெய்திருந்தது குறிப்பிடத்தக்கது.