சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன், தென்மேற்கு வங்க கடல் பகுதியில் தமிழக கரைக்கு அப்பால், மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது என்றும் தெற்கு அந்தமான் பகுதியில் தொடர்ந்து வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதி நீடிக்கிறது என்றும் கூறினார். மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
புதிய புயல் உருவாகி உள்ள நிலையில் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்ட மீனவர்கள் இன்று கடலுக்கு செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது