டெல்லியில் நடைபெற்ற கடைசி டெஸ்டில் விராட் கோலி இரட்டை சதத்தால் இந்தியா முதல் இன்னிங்சில் 536 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

இந்தியா – இலங்கை இடையிலான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 371 ரன்கள் எடுத்திருந்தது. இதையடுத்து இரண்டாம் நாள் ஆட்டம் தொடர்ந்த நிலையில், ஆட்டத்தின் 108 வது ஓவரில் விராட் கோலி 238 பந்துகளில் இரட்டை சதம் அடித்தார். 128 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 536 ரன்கள் எடுத்த நிலையில், முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்து கேப்டன் கோலி முடிவெடுத்தார். இதனையடுத்து, இலங்கை அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *