லாரிகள் வேலைநிறுத்தத்தால் முட்டைகள் தேக்கம்: பல கோடி ரூபாய் இழப்பு

லாரிகள் வேலை நிறுத்தத்தால் நாமக்கல் மாவட்டத்தில் சுமார் 20 கோடி ரூபாய் மதிப்புள்ள முட்டைகள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் சுமார் 700க்கும் அதிகமான கோழிப்பண்ணைகள் உள்ளன. அவற்றில் இருந்து ஒரு நாளைக்கு சுமார் 4கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த முட்டைகள் தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கும், வெளிமாநிலங்களுக்கும் கொண்டு செல்லப்படுகின்றன.

கடந்த 20ஆம் தேதி முதல் நாடு தழுவிய லாரிகள் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருவதால், முட்டைகள் கொண்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏராளமான முட்டைகள் தேக்கமடைந்துள்ளன. மேலும் முட்டைகள் அழுகத் தொடங்கியுள்ளதால் சுமார் 20 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்படும் நிலைய உருவாகியுள்ளது.

எனவே லாரி உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வேலை நிறுத்தப் போராட்டத்தை முடிவிற்கு கொண்டுவர மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பண்ணை உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *