தற்காலிக செவிலியர்களின் சம்பளம் 7 ஆயிரத்து 700ல் இருந்து 14 ஆயிரம் ரூபாயாக உயர்வு…

தமிழ்நாடு அரசு தற்காலிக செவிலியர்களுக்கான ஊதியத்தை 14 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில், தற்காலிக செவிலியர்கள் நியமிக்கப்பட்டு, ஆரம்ப ஊதியமாக, 7 ஆயிரத்து 700 ரூபாய் வழங்கப்படுவதாக கூறியிருக்கிறார்.

இதனை 14 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க, முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி ஆணையிட்டிருப்பதாகவும், அவர் கூறியிருக்கிறார். இந்த ஊதிய உயர்வு இந்தாண்டு ஏப்ரல் ஒன்றிலிருந்து, முன்தேதியிட்டு வழங்கப்படும் என்றும், இவர்களுக்கு ஆண்டுதோறும் 500 ரூபாய் ஊதிய உயர்வு வழங்கப்படும் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருக்கிறார். இதன்மூலம், தொகுப்பூதியம் பெறும், 12 ஆயிரம் செவிலியர்கள் பயனடைவார்கள் என்றும், அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *