ரேஷன் பொருட்களை வீட்டுக்கே சென்று வழங்கும் திட்டத்தின் சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்து அறிக்கை சமர்பிக்குமாறு அதிகாரிகளுக்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில், பொது விநியோக திட்ட ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா, உணவு மற்றும் நுகர்பொருள் துறை அமைச்சர் இம்ரான் உசைன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். டெல்லி முழுவதும் 72 லட்சம் பேர் பொது விநியோக திட்டத்தின் கீழ் அத்தியவசிய பொருட்களை பெற்று வரும் நிலையில், ரேஷன் பொருட்களை அவர்களின் வசிப்பிடம் தேடி அளிக்க முடியுமா? என்பது குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இது தொடர்பான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து விரிவான அறிக்கை சமர்பிக்குமாறு அதிகாரிகளுக்கு கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *