ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி புதிய உச்சத்துக்கு செல்லும்; முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நம்பிக்கை

ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி புதிய உச்சத்துக்கு செல்லும் என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ராகுல் காந்தி, நேற்று தலைவர் பதவியை ஏற்றுக்கொண்டார். இதற்கான விழா டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்டு பேசிய முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், சோனியா காந்தி கடந்த 19 ஆண்டுகளாக சக்தி வாய்ந்த தலைவராக திகழ்ந்ததுடன் கட்சியை சிறப்பாக வழி நடத்தினார் என்று புகழாரம் சூட்டினார். மேலும் தற்போது தலைவராக பதவியேற்றிருகும் ராகுல் தலைமையில் காங்கிரஸ் புதிய உச்சத்துக்கு செல்லும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *