ரஷிய அதிபர் பதவிக்கு நடைபெறவுள்ள தேர்தலில் மீண்டும் போட்டியிடப் போவதாக அந்நாட்டின் அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்துள்ளார்.

ரஷியா நாட்டின் பிரதமராக முன்னர் பொறுப்பு வகித்த விளாடிமிர் புதின் கடந்த 2 ஆயிரத்து 12ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவரது ஆறாண்டு பதவிக்காலம் வரும் மே மாதத்துடன் நிறைவடையவுள்ள நிலையில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் மீண்டும் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். வோல்கா நகரத்தில் உள்ள பிரபல கார் தொழிற்சாலை ஊழியர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், இவ்வாறு அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *