மேஜிக்மேன் போல் செயல்பட்டு மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார் பிரதமர் மோடி; குஜராத் பிரச்சார பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி குற்றச்சாட்டு…….

பிரதமர் மோடி மேஜிக்மேன் போல் செயல்பட்டு மக்களின் கவனத்தை திசை திருப்புவதாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

குஜராத் மாநிலம் வாத்நகரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், ஒரு மேஜிக் மேன் எதையாவது மறைத்து, சில யுக்திகளைக் கையாண்டு, பார்வையாளர்களின் கவனத்தை திசை திருப்புவார் என்று குறிப்பிட்டார். இதேபோல் தான் பிரதமர் மோடியும் கடந்த 10, 15 நாட்களாக மக்கள் பிரச்சனைகள் பற்றி பேசாமல் தம்மைப் பற்றியே பேசி மக்களின் கவனத்தை திசை திருப்புவதாக ராகுல் விமர்சித்துள்ளார். முந்தைய காங்கிரஸ் அரசு, மக்களின் சுகாதாரம், கல்விக்காக மட்டுமே பணத்தை செலவு செய்ததாகவும், ஆனால் பா.ஜ.க. அரசு, விளம்பரத்திற்காக மட்டும் 3 ஆயிரத்து 700 கோடி ரூபாய் பணத்தை வீணாக்கி இருப்பதாகவும் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *