மெக்சிகோ நாட்டின் ஒசாகா நகரில் முள்ளங்கி, பீட்ரூட், காலிபிளவர், முட்டைக்கோசு ஆகிய காய்கறிகள் பயிரிடத் தொடங்கிய காலத்தில் அவற்றை விற்பனை செய்யும் கடைகளில் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் காய்கறிகளால் பல்வேறு உருவங்களைச் செய்து அலங்கரிக்கும் கலை தோன்றியது. இந்நிலையில் 120வது ஆண்டு முள்ளங்கித் திருவிழா கடந்த 23ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. புத்தாண்டுவரை தொடர்ந்து நடைபெறும் இந்தக் கண்காட்சியை ஒரு லட்சம் பேர் கண்டுகளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
2017-12-26