நடிகர் ரஜினிகாந்த் இன்று முதல் 6 நாட்களுக்கு தமது ரசிகர்களை மீண்டும் சந்திக்கிறார். இந்த சந்திப்பின் போது அவரின் அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் ரஜினிகாந்த் கடந்த மே மாதம் கன்னியாகுமரி, நெல்லை, திருச்சி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த ரசிகர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின் இறுதி நாளில் பேசிய அவர் போர் வரும் வரை காத்திருங்கள் என்று கூறியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் ரஜினிகாந்த் இன்று முதல் 31ம் தேதி வரை 18 மாவட்டங்களை சேர்ந்த ரசிகர்களை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் சந்திக்க உள்ளார். இதற்காக விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின் இறுதி நாளில் ரஜினி தமது அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை நிச்சயம் வெளியிடுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *