முன்னாள் டெலிவரி பாயோடு((Delivery Boy)) சேர்ந்து கொண்டு முறைகேட்டில் ஈடுபட்ட அமேசான் ஊழியர் கைது செய்யப்பட்டிருக்கிறார். டெல்லி நேரு பிளேஸ் பகுதியில் இயங்கும் அமேசான் கிளையின் சார்பில் அம்பிகா சாரஃப் என்ற விற்பனை பிரதிநிதி, காவல்துறையினரிடம் புகார் மனு அளித்தார். அதில், தங்களது வாடிக்கையாளர் சிலபல காரணங்களால் திரும்பி கொடுத்த கேமிரா, போலி டெலிவரி பாய் மூலம் பெறப்பட்டு, கையாடல் செய்திருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.
இதுகுறித்து விசாரணை நடத்திய டெல்லி போலீசார், இந்த முறைகேட்டில் ஈடுபட்டதாக, அமேசான் நிறுவனத்தின், முன்னாள் டெலிரி பாய் கவுரவ் என்பவனை கைது செய்தனர். இவனுக்கு உதவுவதாக கூறி முறைகேட்டில் ஈடுபட வைத்த, டெல்லி லாரன்ஸ் சாலை பகுதியில் உள்ள அமேசான் கிளை அலுவலக ஸ்டோர் மேனஜர் ராஜூ சிங் என்பவரும் கைது செய்யப்பட்டார்.