மலை கிராம மக்களின் வசதிக்காக சிறிய பேருந்துகள் விடப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பகுதியில் 70 கோடி ரூபாய் மதிப்பில் சாலை அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் துணை மின் பணிமனை திறப்பு விழாவில் மூன்று அமைச்சர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பர்கூர் மலைப்பகுதியில் அனைத்து சாலைகளும் சீரமைக்கப்படும் என்றார்.
உயர்மின் அழுத்த மின்பாதையை விளை நிலங்களுக்குள் கொண்டு செல்லும்போது, விவசாயிகளுக்கு நட்ட ஈடு அதிகரிக்க முதலமைச்சர் ஆணையிட்டுள்ளதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்