முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது, எடுக்கப்பட்ட வீடியோ, விசாரணை ஆணையத்திடம் ஒப்படைக்கப்படும் என்று டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் வருமான வரித்துறை சோதனை உள்நோக்கத்துடன் நடைபெறுவதாக குற்றம் சாட்டினார். மேலும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது, சசிகலாவால் எடுக்கப்பட்ட வீடியோ, விசாரணை ஆணையத்திடம் ஒப்படைக்கப்படும் என்றும், வருமான வரித்துறை சோதனையில் கைது நடவடிக்கை மேற்கொண்டால் அதனை சட்டப்படி சந்திப்பேன் என்றும் அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *