குஜராத்தில் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி.; 3 நாட்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதாக தகவல்….

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குஜராத்தில் உள்ள அக்சர்தாம் கோயிலில் இருந்து 3 நாள் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார்.

குஜராத் மாநில சட்டசபையின் பதவிக் காலம் ஜனவரி 22-ம் தேதி முடிவடைகிறது. குஜராத்தின் 182 தொகுதிகளுக்கும் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்டம் 89 தொகுதிகளுக்கு டிசம்பர் 9-ம் தேதியும், 2-வது கட்டமாக 93 தொகுதிகளுக்கு டிசம்பர் 14-ம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 18-ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலையொட்டி, அனைத்து கட்சித் தலைவர்களும் மாநிலத்தை முற்றுகையிட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, காந்தி நகரில் உள்ள அக்சர்தாம் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர், பர்காந்தா மாவட்டத்தில் தனது 3 நாட்கள் தேர்தல் பிரச்சாரத்தை அவர் தொடங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *