மிட்டாய் கொடுப்பதாக அழைத்துச் சென்று 5 வயது சிறுமி பலாத்காரம்

மத்தியப்பிரதேசத்தில் மிட்டாய் கொடுப்பதாகக் கூறி அழைத்துச் சென்று கோயில் வளாகத்துக்குள் வைத்து 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக பூசாரிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தாதியா என்ற மாவட்டத்தில் விவசாயி ஒருவரின் 5 வயது மகளை மிட்டாய் தருவதாகக் கூறி அழைத்துச் சென்ற 55 வயதான ராஜூ பண்டிட் , 45 வயதான படோலி பிரஜாபதி  ஆகிய பூசாரிகள், கோயில் வளாகத்துக்குள் வைத்து சிறுமியை பலாத்காரம் செய்து, யாரிடமும் சொல்லக் கூடாது என மிரட்டி வீட்டில் விட்டுச் சென்றதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.

சிறுமி நடவடிக்கையில் சந்தேகமடைந்த தாய் மருத்துவமனையில் சேர்த்து நடந்தவற்றை காவல்துறையில் தெரிவித்தார். இதையடுத்து இரு பூசாரிகளும் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளதால் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது. 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பாலியல் பலாத்கார வழக்குகளில் மரணதண்டனை முதலாவதாக அறிவித்த மத்தியப்பிரதேசத்தில் இதுவரை 12 பேருக்கு தூக்குதண்டனை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *