சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை குறைக்கும் வகையில், நீர்ம பெட்ரோலியத்தோடு மெத்தனாலை கலந்து விநியோகிக்க, மத்தியஅரசு திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், மானியமில்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 59 ரூபாய் உயர்ந்திருக்கிறது. மானிய விலை எரிவாயு சிலிண்டரின் விலை இரண்டு ரூபாய் 89 காசுகள் அதிகரித்திருக்கிறது. பன்னாட்டு அளவிலான நணய மதிப்பு மற்றும், அந்நிய செலாவணி கையிருப்பில் காணப்படும் ஏற்ற இறக்கங்களே இந்த விலையேற்றத்திற்கு காரணம் என கூறியிருக்கிறது.
இதற்கிடையே, சமையல் எரிவாயு சிலிண்டரில், நீர்ம பெட்ரோலியத்தோடு, 20 விழுக்காடு மெத்தனால் கலந்து விநியோகிக்க, மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. இதனால் சிலிண்டர் விலை நூறு ரூபாய் வரை குறையும் என மத்திய அரசு கருதுகிறது.