மம்தா பானர்ஜியுடன் கே.சந்திரசேகர ராவ் இன்று பேச்சுவார்த்தை

திரிணாமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜியுடன் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் இன்று மாலை பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

கொல்கத்தா தலைமைச் செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற உள்ளதாக திரிணாமூல் கட்சி வட்டாரத்தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பேச்சுவார்த்தையின் போது, மக்களவைத் தேர்தலில் மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக அனைத்துக் கட்சிகளும் ஓரணியில் திரள்வது குறித்து ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே சில சுற்றுகள் தொலைபேசியில் இரு மாநில முதலமைச்சர்களும் பேச்சு நடத்தியுள்ளனர். காங்கிரஸ், பாஜக அல்லாத கூட்டணியை குறித்து சந்திரசேகர ராவ் பேசி வரும் நிலையில் இச்சந்திப்பு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *