மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு சதவீதம் அகவிலைப்படி உயர்வு ; ஜூலை முதல் முன் தேதியிட்டு வழங்கப்படும் என மத்திய அரசு அறிவிப்பு….

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக உயர்த்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கடந்த 3ஆம் தேதி மூன்றாவது முறையாக மாற்றி அமைக்கப்பட்டது. இதையடுத்து பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில், மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படியை 4 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக உயர்த்தி கொடுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 1 சதவீத அகவிலைப்படி ஜூலை 1ம் தேதி முதல் முன் தேதியிட்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 61 லட்சம் மத்திய அரசு ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள். விலைவாசி ஏற்றத்தை கருத்தில் கொண்டு அகவிலைப்படி உயர்த்தப்படுவதாக மத்திய அரசு கூறியுள்ளது. தனியார் தொழில்துறை ஊழியர்களுக்கான பணிக்கொடை திருத்த சட்டத்திற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், பால் உற்பத்தி மேம்பாட்டிற்கு 10 ஆயிரத்து 881 கோடி ரூபாய் நிதி ஓதுக்கீடு செய்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *