மதுரை கிரானைட் விசாரணையில் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் குழு பரிந்துரைகளை ஏற்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னையில் பெய்து வரும் மழையால் சென்னை மாநகரம் தண்ணீரில் தத்தளிக்கிறது என்று தெரிவித்தார். மதுரை கிரானைட் விசாரணையில் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் குழுவிற்கு அரசு உதவி செய்யவில்லை என்று குற்றம்சாட்டிய முத்தரசன், சகாயம் குழு பரிந்துரைகளை ஏற்க வேண்டும் என்றும் தமிழகம் முழுவதும் கிரானைட் ஊழல் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *