மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு புதிய நிர்வாகிகள் நியமனம், பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளர் பெயர்களை அறிவித்தார் கமல்

சென்னையில் மக்கள் நீதிமய்யக் கட்சியின் கொடியை ஏற்றி வைத்து, அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பெயர்களையும் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

மக்கள்நீதி மய்யத்திற்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியுள்ள நிலையில், ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் பேசிய கமல்ஹாசன், கட்சியின் தலைவராக தாமும், துணைத் தலைவராக கு.ஞானசம்பந்தனும், பொதுச்செயலாளராக அருணாசலமும், பொருளாளாராக சுரேஷூம் செயல்படுவார்கள் என அறிவித்தார்.

பின்னர் சில கேள்விகளுக்கு பதிலளித்த கமல்ஹாசன், மக்கள்நீதி மய்யம் கட்சியில் எப்போதுமே அனைவரது கருத்துகளும் கேட்கப்படும் என்றும், ஒற்றைத் தலைமையின் கீழ் செயல்படும் அமைப்பாக இருக்காது என்றும் தெரிவித்தார். மேலும் கொடி ஏற்ற நிகழ்ச்சியால் எல்டாம்ஸ் சாலையில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதற்கு கமல் வருத்தம் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *