புனித ரமலான் ஈகை பெருநாள் கொண்டாடும் அனைத்து இஸ்லாமிய பெருமக்களுக்கும் இனிய ரமலான் வாழ்த்துக்களைத் தெரிவித்து கொள்கிறேன் – S.A.N.வசீகரன்

மனிதநேயம் பதிக்கும் ரமலான்!
தமிழக ஆம்ஆத்மிகட்சி ரமலான் வாழ்த்துக்கள்!!
உலகெங்கும் வாழும் இஸ்லாமிய பெருமக்கள் இன்றும் நாளையும் ரமலான் பெருநாளை கொண்டாடுகிறார்கள்.
இதில் மனிதநேயம், சகோதரத்துவம், சமூகநல்லிணக்கம் பிரதான இடம் வகிக்கிறது. அனைத்து சமூக மக்களும் ஒன்றினைந்து அன்பையும் உணவுகளையும் பரிமாறி கொள்வதுடன் 30 நாட்கள் நோன்பிருந்து ஏழைகளுக்கு உதவிகள் செய்து மகிழ்வது சிறப்பிற்குறியது.
இந்திய தேச விடுதலைக்காக தன் பொருள், உழைப்பு, தியாகம் தந்தவர்கள் இஸ்லாமிய மக்களும் ஆவர். இந்திய தேசம் என்பது மதசார்பற்ற நாடு, வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட நாடு, நாம் அனைவரும் தேசத்தால் இந்தியர்கள், இனத்தாலும் மொழியாலும் தமிழர்கள் வழிபாட்டால் இந்துவாக, முஸ்லிமாக, கிருத்துவராக, சீக்கிராக ஆக எந்த மதமாக வேண்டுமானாலும் நாம் இருக்கலாம் ஆனால் அனைத்து மதங்களும் போதிக்கின்ற மனிதநேய மாண்பாளர்களாக நாம் வாழ உறுதிக்கொள்ள வேண்டும், இதை சீர்குலைக்க துடிக்கும் எந்த தீய சக்திகளின் முயற்சிகளையும் முறியடிப்போம்.
தேசம் காப்போம்! தமிழ் இனம் என்பதில் பெருமை கொள்வோம்!!
புனித ரமலான் ஈகை பெருநாள் கொண்டாடும் அனைத்து இஸ்லாமிய பெருமக்களுக்கும் தமிழக ஆம்ஆத்மிகட்சியின் ரமலான் நல்வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *