புதுச்சேரியில் வீட்டில் பூஜை செய்வதாக கூறி, 36 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் சிவகணபதி நகரைச் சேர்ந்த ஆனந்தன் என்பவரது வீட்டில், பூஜை செய்வதாக கூறி, 2 பெண்கள் உட்பட 3 பேர் சுமார் 2 லட்சம் ரூபாய்க்கும் மேலாக வாங்கியுள்ளனர். பின்னர், ஆனந்தன் வீட்டில் இருந்த 36 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதுதொடர்பாக, வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டிருந்த வில்லியனூர் காவல்துறையினர், கொள்ளையில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து நகைகளையும், பணத்தையும் பறிமுதல் செய்த காவல்துறையினர், 3 பேரையும் சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், முதலியார்பேட்டை பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி சின்னசெல்வம் 5-க்கும் மேற்பட்ட மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அவரது உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த முதலியார்பேட்டை காவல்துறையினர், கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *