பார்வையற்றோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

துபாயில் பார்வைத்திறன் குன்றியோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இதன் இறுதிப் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 8 விக்கெட் இழப்புக்கு 308 ரன்கள் குவித்தது. இதனையடுத்து 309 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 39.2 வது ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 309 ரன்களை எட்டியது. இதன் மூலம் இந்திய அணி 2வது முறையாக உலகக் கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. இதனிடையே உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *